Ashta Lakshmi Tourist and Travels helps you to go for a tour – place of your choice, from many sch
23/02/2023
HI FRIENDS! HOW ARE YOU?
WHO WANTS ANY TOUR FROM SOUTH INDIA CONTACT ME
088256 66165👏👏
12/11/2022
ASHTALAKSHMI TOURIST AND TRAVELS
Hi! friends how are you?
just inform to you,my tarrif post is an approximate amount,its differ in 2022 to 2023 increased in 10%.Exceeds due to inevitability.
website : www.ashtalakshmitravels.in
email : [email protected]
01/12/2021
visit my website:www.ashtalakshmitravels.in
email id: [email protected]
cell and Whats app: +91 8825666165,+91 8015877195.
27/11/2021
HI FRIENDS! WELCOME TO SOUTH INDIA
PLEASE VISIT ONE TIME YOU FEEL The thread will be as happy as it gets.
WORLD NUMBER ONE TEMPLE CITY( more temple place of TAMILNADU)
WORLD SECOND BIG BEACH CHENNAI
BEST TOURIST PLACE
HONEY MOON TRIP
BEST SITE SEEING
CHILDRENS ENTERTAINMENT
HISTORICAL MUSEUM
SECOND GOLDEN TEMPLE IN INDIA (TAMIL NADU)
THRILLING BOATING
BOAT HOUSE
METHOD OF FARMING(RICE)
SALT PRODUCTION
TASTY NATURAL FOOD
GUIDE SERVICE
LOCATION WITH MORE LINEN SILK SAREES
BEST SHOPPING PLACE,AND MALL
HOLLYWOOD MOVIE SPOT
A PLACE WITH LOT OF SCULPTURE
ALL TYPE OF VEHICLE
ALL TYPES OF HOTELS AVAILABLE
BUSINESS TRIP
YOU WANT ANY TRIP FROM SOUTH INDIA PLEASE CONTACT ME.
ASHTALAKSHMI TOURIST AND TRAVELS (PVT LTD)
EMAIL ID : [email protected]
WHATS APP: +91 8825666165
WEB :www.ashtalakshmitravels.in
17/11/2021
12/11/2021
PANCHA BOOTHA STHALAM TOUR PACKAGE
(toyota etios,toyota innova crysta, tempo traveler,valvo bus with A/C, 3 AND 4 STAR ROOMS PROVIDED)
7 DAYS TRIP(7 DAYS,7 NIGHT) 4 PERSON,WITH ROOMS PACKAGE AMOUNT Rs 1,12000.
7 DAYS TRIP(7 DAYS,7 NIGHT) 6 PERSON,WITH ROOMS, PACKAGE AMOUNT Rs 157000.
7 DAYS TRIP(7 DAYS,7 NIGHT) 10 PERSON,WITH ROOMS PACKAGE AMOUNT Rs 215000.
7 DAYS TRIP(7 DAYS,7 NIGHT) 40 PERSON,WITH ROOMS PACKAGE AMOUNT Rs 790000.
no additional payment(BASED ON INDIAN MONEY)
PACKAGE STARTING OFFICE TO OFFICE
you want to see this please contact me
ASHTALAKSHMI TOURIST AND TRAVELS
Whats APP : +91 8825666165
EMAIL ID : [email protected]
website :www.ashtalakshmitravels.in
12/11/2021
AARUPADAI MURUGAN TEMPLE TOUR PACKAGE
(toyota etios,toyota innova crysta, tempo traveler,valvo bus with A/C, 3 AND 4 STAR ROOMS PROVIDED)
10 DAYS TRIP(10 DAYS,9 NIGHT) 4 PERSON,WITH ROOMS PACKAGE AMOUNT Rs 1,25000.
10 DAYS TRIP(10 DAYS,9 NIGHT) 6 PERSON,WITH ROOMS, PACKAGE AMOUNT Rs 205000.
10 DAYS TRIP(10 DAYS,9 NIGHT) 10 PERSON,WITH ROOMS PACKAGE AMOUNT Rs 280000.
10 DAYS TRIP(10 DAYS,9 NIGHT) 40 PERSON,WITH ROOMS PACKAGE AMOUNT Rs 10,25000.
no additional payment (BASED ON INDIAN MONEY)
PACKAGE STARTING OFFICE TO OFFICE
you want to see this please contact me
ASHTALAKSHMI TOURIST AND TRAVELS
Whats APP : +91 8825666165
EMAIL ID : [email protected]
website :www.ashtalakshmitravels.in
12/11/2021
NAVAGRAHA TOUR PACKAGE
( toyota etios, toyota innova crysta,tempotraveller,VALVO bus with a/c,3 and 4 star rooms provided)
4 person,5 days trip, (4 night,5 days) with rooms.
package amount Rs 62000.
6 Person 5 days trip,(4 night,5 days)with rooms,package amount Rs 97000.
10 person 5 days trip, (4 night,5 days) with rooms.
package amount Rs 1,30000.
40 person 5 days trip, (4 night,5 days) with rooms.
package amount Rs 490000
no additional payment (BASED ON INDIAN MONEY)
you want to see this please contact me
ASHTALAKSHMI TOURIST AND TRAVELS
Whats APP : +91 8825666165
EMAIL ID : [email protected]
website :www.ashtalakshmitravels.in
07/11/2021
Hello friends!
We are Ashtalakshmi Tourist and Travels.
Your application for our service is welcome.
Service stone provided by us,
Tour arrangement,
pickup and drop,
Company tie up,
monthly based vehicle service,
honeymoon package,
We have vehicles required for companies, please contact us if you need.
Starting & closing kms hrs will be calculated from our office to office.
T&C apply.
whats app: +91 8825666165
phone : +91 8015877195,9940326486.
mail id: [email protected]
website :www.ashtalakshmitravels.in
21/09/2021
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன[1].
1987-ல், பெருவுடையார் கோயில், யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது[1]. பின்னர், 2004-ல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலும் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன[1]. தமிழ் நாடு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புக்களை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை பதிப்பித்துள்ளது.
கோயிலின் சிறப்புகள்
சோழ மன்னர்களில் 2ம் ராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோயில். இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.
வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது. இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். இக்கோயில் கருவறை விமானம் ஐந்து நிலை மாடங்களுடன் 80 அடி உயரம் உள்ளது. 63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றி, அங்கு கட்டிய கோயிலே ஐராவதேசுவரர் கோயிலாகும்[3]. முதலில் இக்கோயிலின் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டுப் பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது[3]. தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது[3]. இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி காணப்பட்டது.[3]
கட்டிடக்கலை
ஐராவதேஸ்வரர் கோயில் விமானம்
ஐராவதேசுவரர் கோயில் திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது. தேர் வடிவிலமைந்த இக்கோயில் கரக்கோயில் என்ற வகையைச் சேர்ந்தது என்பதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியப் படைப்புகளில் காணப்படுகின்றன.[4] தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழீசுவரம் கோயில் இரண்டையும் விடச் சிறியதாக இருப்பினும் இக்கோயில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்ததாய் உள்ளது. கோயிலின் முதன்மை நுழைவாயில் கிழக்குப்புறத்தே அமைந்துள்ளது.[5] கோயில் விமானம் 24 மீ (80 அடி) உயரங்கொண்டது.[1] இக்கோயிலின் கருவறையைச் சுற்றி உட்சுற்றுப்பாதையும் ஒருகோட்டச்சு மண்டபங்களும் அமைக்கப்படவில்லை. முன் மண்டபம் ராஜகம்பீரன் திருமண்டபம் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது.[1] முன் மண்டபத்தின் தென்பகுதி கல்லாலான சக்கரங்களுடன் குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் தேர் வடிவிலுள்ளது.[6] இம்மண்டபத்தின் தூண்கள் நுட்பமான அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளன.[1]
இசைப் படிகள்
இசைப்படிகள்
நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள், தட்டும்போது சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன.
ராஜகம்பீரன் திருமண்டபம்
ராஜகம்பீரன் திருமண்டபம்
ராஜகம்பீரன் திருமண்டபம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்றுவரை இந்திய கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதில் உள்ள சக்கரம் உள்ளிட்ட பல சிற்பங்கள் அந்நியர் படையெடுப்பால் சிதைக்கப்பட்டு தொல்லியல் துறையால் பிற்காலத்தில் திரும்ப சேர்க்கப்பட்டது.
குதிரைகள், யானைகள் பூட்டப்பட்ட ரதத்தின் அமைப்பில் இருக்கும் இம்மண்டபம், நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்களால் நிறைந்தது. தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.
சிற்பங்கள்
இடது: பிரம்மா. வலது:லிங்கோத்பவர் இடது: பிரம்மா. வலது:லிங்கோத்பவர்
இடது: பிரம்மா. வலது:லிங்கோத்பவர்
இடது:யானை-ரிஷபம். வலது:நடன மங்கை இடது:யானை-ரிஷபம். வலது:நடன மங்கை
இடது:யானை-ரிஷபம். வலது:நடன மங்கை
இடது:சுவர் சிற்பங்கள். வலது:இராமாயணக் காட்சி இடது:சுவர் சிற்பங்கள். வலது:இராமாயணக் காட்சி
இடது:சுவர் சிற்பங்கள். வலது:இராமாயணக் காட்சி
இடது:சிவன் -பார்வதி வலது:திருமணக் காட்சி இடது:சிவன் -பார்வதி வலது:திருமணக் காட்சி
இடது:சிவன் -பார்வதி வலது:திருமணக் காட்சி
கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவறையில் இலிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது. சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் பிரகாரத்தில் காணப்படுகிறது. பிறகோயில்களில் இல்லாத, அதிசயமான சிற்பங்களும் இங்கு உண்டு. கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
கோயிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர்(சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார். மண்டபத்தின் மேல் பிரகாரத்தில் நாயன்மார்கள், 108 சிவனடியார்களின் உருவங்கள் உள்ளன.
சாளரங்கள்
சாளரங்கள்
பிரகாரங்களின் மற்றொரு அழகான அம்சம் அங்கு அமைக்கப்பட்டுள்ள காற்றோட்டமிக்க மண்டபங்களாகும். இம்மண்டபங்களில் சதுர, செவ்வக, நீள்சதுர, வட்ட, பூக்கள் வடிவிலான குறுக்கும் நெடுக்கிலும் காற்று நுழையும்படி அமைக்கப்பட்ட ஒரே கல்லால் அமைக்கப்பட்ட கிரானைட் சாளரங்கள் அமைந்துள்ளன.
அம்மன் சன்னதி
அம்மன் சன்னிதி
ஐராவதேஸ்வரர் கோயிலின் வலப்புறத்தில் வெளியே தெய்வநாயகி அம்மனுக்குத் தனியாக கோயில் அமைந்துள்ளது.
தல வரலாறு
இரண்டாம் இராஜராஜனின் காலத்தில் இராஜராஜேச்சுரம் என்று பெயரிடப்பட்டு, இன்று தராசுரமென மருவி வழங்கப்படுகிறது. ஐராவதேஸ்வரரின் துணைவி தெய்வநாயகி. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்கிற யானை துருவாச முனிவரின் சாபத்தால் அதன் வெள்ளை உருவம் மாறி கருமை நிறம் அடைந்தது. தன் நிறம் மாறியதால் வருத்தமுற்ற ஐராவதம் இத்தலத்திற்கு வந்து இங்கு எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும், அதனால்தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் என்று வழங்கலாயிற்று என்றும்[7] தல புராணம் தெரிவிக்கிறது. இக்கோயிலுக்குள் காணப்படும் இந்திரன் அமர்ந்திருக்கும் ஐராவதத்தின் சிலை இக்கூற்றுக்குச் சான்றாக உள்ளது.[8].
எமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால், அக்குளம் "எமதீர்த்தம்" என அழைக்கப்படுகிற்து.
இத்திருத்தலம் தொடர்பான மற்றொரு புராணமும் உள்ளது. மரணமற்ற பெருவாழ்வு வாழவும், தேவர்களை வெல்லவும் தாரன் என்ற அசுரன் இத்தலத்து இறைவனை பூசித்து, தவம் இருந்து தான் விரும்பிய அருளைப் பெற்றதால் இத்தலம் உள்ள இடம் தாராசுரம் என்றானது என்றும் கூறுகிறது.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[2]
05/08/2021
HI FRIENDS HOW ARE YOU?
17/03/2021
Astalakshmi tourist and travels Tarrif
01/03/2021
வேலூர் மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையத்தில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது.
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில்
வேலூர் மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையத்தில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது.
பராங்குச சோழன் கட்டிய 3ம் நூற்றாண்டு கோவில் இது. இங்கு ஒரு “கடிகை நேரம், அதாவது ஒரு நாழிகை- (4 நிமிடங்கள்) மட்டும் இருந்தாலே மோட்சம் கிட்டிடும்!. அத்தனை பெருமை உடையது “கடிகாசலம்’ என்று அழைக்கப்படும் சோளிங்கர்.
லட்சுமி நரசிம்மர்
750 அடி உயரத்தில், 1305 படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் ஒரே மலை குன்றின் மீது 200 அடி நீளம், 150 அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கோவில் உள்ளது. லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார். வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் 2 திருச்சுற்றுகள் கொண்டுள்ள அழகிய கோவில்.
பொதுவாக பெருமாள் கோவில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டுமே நரசிம்மர், கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் வீற்றிருக்கிறார். சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன், இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப்பட்டையுடன் லட்சுமி நரசிம்மர் காட்சி தருகிறார்.
விசுவாமித்திரர்
விசுவாமித்திரர், ஒரு கடிகை நேரம் இம்மலையில் இருந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு பிரம்மரிஷி பட்டமும் பெற்றதாக வரலாறு உள்ளது. பக்தன் பிரகலாதனுக்கு காட்சி தந்த நரசிம்ம அவதார திருக்கோலத்தை தாங்களும் கண்டு ஆனந்தமடைய வேண்டுமென வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பரத்துவாஜர் ஆகிய முனிசிரேஷ்டர்களோடு, விசுவாமித்திரர் இத்திருத்தலத்தில் தவமிருந்துள்ளார்.
கடிகாசலத்தில் தவம் மேற்கொண்டிருந்த சப்தரிஷிகளுக்கு காலன், கேயன் எனும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுத்து வந்தனர். அவர்களை வதம் செய்வதற்காக ஆஞ்சநேயர், எம்பெருமானின் சங்கு சக்கரங்களை வேண்டிப் பெற்று அவற்றின் துணையோடு, அரக்கர்களை அழித்தார். மகரிஷிகள் எழுவரின் தவத்தினை மெச்சிய திருமாலும், திருக்கடிகைக்கு எழுந்தருளி நரசிம்ம மூர்த்தியாகக் காட்சியளித்தார்.
ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயரும் நரசிம்ம அவதாரக் காட்சியைக் கண்டு ஆனந்தத்தோடு, சங்கு சக்கரத்தோடு பெரியமலைக்கு எதிரில் யோக ஆஞ்சநேயராக அமர்ந்துவிட்டார்.
இம்மலையின் அருகே எதிர்திசையில் 350 அடி உயரத்தில், 406 படிக்கட்டுகள் கொண்ட, சிறிய மலையின் மீது ஆஞ்சநேயர் தியான நிலையில் அமர்ந்தபடி பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார்.
ஆஞ்சநேயருக்கு நான்கு திருக்கரங்கள் உள்ளன. ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெபமாலை உள்ளன.ஆண்டு முழுவதும் கண் மூடிய நிலையில் தியானத்தில் இருக்கும் லட்சுமி நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
உற்சவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தனிக்கோவில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் தனி சன்னதி கொண்டுள்ளார். அமிர்த தீர்த்தம், பிரம்மதீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன.
பில்லி, சூனியம்
பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப் பட்டவர்கள் பிரம்மதீர்த்தத்தில் நீராடி மலைமீது அமர்ந்து அருள் பாலிக்கும் யோக நரசிம் மரையும், யோக ஆஞ்ச நேயரையும் வணங்கினால் நோய்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. இங்கு காஞ்சிபுரம் வரதராஜர் பிரம்மோற்சவத்தின் 3ம் நாள், பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளுகிறார். இந்தக்குளத்தில் நீராடினால், பிரம்மதோஷம் கூட நீங்கும் என்பது ஐதீகம்.
நோய் தீர்க்கும் மலை
காஞ்சீபுரத்திற்கும், திருவேங்கட மலைக்கும் இடையில் சோளிங்கர் அமைந்துள்ளது. மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலம். மனஅமைதி தரும் அற்புதமான பூமி. இந்த மலையில் உள்ள மூலிகை மரங்களால் ரத்தக்கொதிப்பு, இதயநோய் முதலான பக்தர்களின் பிரச்சினை விரைவில் குணமாகிறது. இங்குள்ள திருகுளத்திற்கு ‘அனுமத் தீர்த்தம்’ என்பது திருநாமம். ஸ்ரீ யோக நரசிம்மருக்கு சோளிங்கரை தவிர மற்ற இடங்களிலும் கோவில்கள் உண்டு. ஆனால் யோக ஆஞ்சநேயருக்கு இங்கு மட்டுமே கோவில் உள்ளது. அவர் இங்கு யோக மூர்த்தியாக மட்டுமல்லாமல், அகிம்சை மார்க்கத்தை நிலை நாட்டியவரும் ஆவார்.
பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமனுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் இங்கு வந்து நரசிம்மரை தரிசனம் செய்திருக்கிறார்கள். சோளிங்கர் லட்சுமி நரசிம்மரை வணங்கினால் குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும். வியாபார நஷ்டம் விலகும். லாபம் பெருகும். பில்லி சூன்யத்தை விரட்டலாம்.
புதிதாக நிலம் வாங்க வேண்டும் என நினைப்பவர்களும், வீடு கட்ட ஆசைப்படு பவர்களும் கோவில் மலைப்பாதைக்கு அருகில் வழிநெடுக கற்களை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து கோபுரம் போல் கட்டி, வேண்டிக்கொண்டால், விரைவில் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இங்கே உள்ள நரசிம்ம குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு தானம், தர்மம் செய்வது கயையில் செய்வ தற்கு சமமானது என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.
கல்கண்டு படைத்தல், வெல்லம் படைத்தல், வாழைப்பழம் தருதல், நரசிம்மருக்கும், தாயாருக்கும் வேஷ்டி புடவை சார்த்துதல், தயிர்சாதம் செய்து பிரசாதம் படைத்தல் என வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள். வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும். அந்த நாளில் திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்வது விசேஷம். சோளிங்கரில் முதலில் நரசிம்மரைத் தரிசித்து விட்டு பின் ஆஞ்சநேயரை தரிசிப்பது வழக்கம். சுவாமி ஸ்ரீ சாளக் கிராம மாலை அணிந்துள்ளார். இவரது வடிவத்தை சிவா வடிவம் என்கின்றனர். இத்தலத்து பெருமாள், ஒரே கல்லால் ஆன மலை மீது அருள்பாலிக்கும் தன்னை 1500 படிகள் ஏறி வந்து தரிசித்தாலே பலன் தந்து விடுவார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
குங்குமம்-அர்ச்சனை
இந்த ஆலயத்தில் குறிப்பிட்ட தொகையை வழங்கினால் பிறந்த தினத்தன்று அர்ச்சனை செய்து குங்குமப் பிரசாதம் அனுப்பி வைக்கிறார்கள். திருக்கடிகை மலை ஏறி வழிபட இயலாத மெய்யன்பர்கள் ஒரு நாழிகை நேரம் திருக்கடிகையை மனத்தில் நினைத்துச் சிந்தித்தாலே போதும் மோட்சம் சித்திக்கும் எனப் புகழ்ந்துரைக்கின்றனர்.
வியாழக்கிழமைகளில் பிரம்மதீர்த்தத்தில் நீராடி நரசிம்மசுவாமியைத் துதிப்பதால் வேண்டியதெல்லாம் பெறலாம். தூய மனத்துடன் நீராடி நம்பிக்கையுடன் சோளிங்கரில் பித்ரு தர்ப்பணம், தானம், தவம் முதலியன செய்தால் அவன் பரம்பரை தழைத்தோங்கும். ஒரு போதும் வம்சம் அழியாது. அத்தீர்த்தக்கரையில் மரம்செடி முதலியன வைத்து வளர்த்தால் இம்மையிலும், மறுமையிலும் எல்லா நன்மையையும் அடைவர்.
தினமும் காலை 8.30 மணியில் இருந்து மாலை 6 மணிவரைக்கும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் தான் கோவில் நடை திறந்திருக்கும். முதலில் விசுவரூபம், நித்யபடி, முதல்காலம், 2&ம் காலம், அரவணை ஆகிய முறைகளில் பூஜைகள் நடக்கிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவ பூஜைகள் நடக்கிறது.
ஸ்ரீராமரின் சங்கு-சக்கரத்தால் அரக்கர்களை அழித்த அனுமன்
தவ முனிவர்களான அத்திரி, காஷ்யபர், வசிஷ்டர், ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர் என்னும் சப்தரிஷிகளும் இத்தலத்தில் தவமிருந்து பெருமாளின் நரசிம்ம அவதாரத்தைக் காண ஆசைப்பட்டனர். அதேசமயம் அனுமனும், ஸ்ரீராம அவதாரம் முடிந்து ஸ்ரீராமன் வைகுண்டத்திற்கு செல்லும் பொழுது தானும் உடன்வருவதாக கூறியதால் அவரும் இந்த தலத்தில் வந்து காத்திருந்தார்.
இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த சப்த ரிஷிகளுக்கு காலன், கேயன் என்னும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதைக்கண்டு அனுமன் ஸ்ரீராமனிடம் பிரார்த்தனை செய்தார். ஸ்ரீராமபிரான் தன்னுடைய சங்கு சக்கரத்தை அனுமனிடம் கொடுத்து இதைக் கொண்டு அரக்கர்களை அழிக்க உத்தரவிட்டார். அனுமனும் அப்படியே செய்தார். காலன், கேயன் என்ற அரக்கர்கள் மாண்டனர்.
WELCOME TO SOUTH INDIA
www.ashtalakshmitravels.in
whats app:+91 8825666165
23/02/2021
ASHTALAKSHMI TOURIST AND TRAVELS (PVT LTD)
KELAMBAKKAM,CHENNAI,TAMIL NADU, INDIA
Hi friends! are you business man?would you like to join my business ,its useful for your side income. Nissan sunny 4+1 Innova Crysta 7+1 and tempo traveler 12+1 need to my business purpose, so invest your funds for bought a new vehicle attached in my business. vehicle registration from your name or administration name, thats your choice , already all type of 20 vehicle attached in my travels but most of the people want its vehicle, .when you want to see vehicle account statement i'll show immediately, 100% safe and secure so don't panic ,only bank transaction,please avoid cash transaction. i'll show wanted vehicle given below.only interest people contact me,please avoid unwanted calls,further detail contact my mail id: [email protected]
www.ashtalakshmitravels.in
23/02/2021
THIRUKADAIYUR ABIRAMI TEMPLE
தை அமாவாசை தினத்தில் அபிராமி பட்டர் பெளர்ணமி திதி என சொல்ல அந்த பக்தனின் வார்த்தையை மெய்பிக்க பெளர்ணமியாக காட்சிதர அம்பாள் தன் காதனியை எறிந்து முழு நிலா காட்சி தர செய்தார்.
சோழநாட்டில் திருக்கடையூரில் அபிராமி பட்டர் வாழ்ந்துவந்தார். அவர் எந்நேரமும் அம்பிகை மீது தீராத பக்தி கொண்டிருந்தார். அவரை அப்பகுதி மக்கள் பித்தன் என கேளி செய்து கொண்டிருந்தனர்.
அப்பகுதியை சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். அவர் நகர் வலம் செல்லும் போது, அபிராமி பட்டர் தியானம் செய்து கொண்டிருந்தார். அவர் யார் என சரபோஜி கேட்க, அவர் ஏதோ ஒரு துர்தேவதையை வழிபடும் பித்தர் என மற்றவர்கள் கூறினர்.
அமாவாசை திதி தினமான அன்று அவரிடம் சென்று இன்று என்ன திதி என மன்னர் கேட்க, பட்டரோ பௌர்ணமி திதி என கூறினார்.
பின்னர் தியானம் கலைந்ததும் தான் தெரிந்தது அவர் கூறியது தவறு என. ஏற்கனவே பித்தன் என மக்கள் கூறி வரும் நிலையில், தான் உண்ணை வணங்குவதைக் கூட அப்படி நினைக்கின்றனர் என வேண்டி, தான் உயிர் துறக்க நினைத்தார்.
மனிதர்கள் ஆசி வழங்கும் போது சொல்லக்கூடிய பதினாறு பேறுகளை விடுத்து, அபிராமியுடன் வேறு பதினாறு பேறுகளை கேட்கின்றார்.
பதினாறு பேறுகள்
புகழ்
கல்வி
ஆற்றல்
வெற்றி
நன்மக்கள்
பொன்
நெல்
அறிவு
பெருமை
ஆயுள்
நல்லூழ்
இளமை
துணிவு
நோயின்மை
நுகர்ச்சி
பொருள்.
ஆனால் அபிராமிப்பட்டார் அன்னை அபிராமியிடம் வேண்டும் பதினாறு பேறுகள் எவை தெரியுமா?
அபிராமி அந்தாதி
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!
அபிராமி பட்டர் அதன் விளக்கம் பின்வருமாறு:-
கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
குறையாத வயது (நீண்ட ஆயுள்)
கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)
தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்) ௧௧ .மாறாத வார்த்தை (வாய்மை)
தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை) அன்னையை ,மனமுருகி வேண்டினால் அனைத்தையும் தருவாள்.
இந்த பதினாறு பேறுகளையும் தரும்படி அன்னை அபிராமியை வேண்டுவோம்.
தை அமாவாசை சிறப்புகள் என்ன, அன்று செய்ய வேண்டியவற்றை தெரிந்து கொள்ளுங்கள்...
அபிராமி பட்டர் விழா
தை அமாவாசை தினத்தில் அபிராமி பட்டர் விழா மிக கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். பக்தன் ஒருவனின் அன்புக்கு கட்டுப்பட்டு, அமாவாசை தினத்தில் பௌர்ணமி நிலவை காட்டி அருளினார்.
நிலவை காட்டும் படி அபிராமி அன்னையை நோக்கி தன் அந்தாதி பாடல்களை பாடினார். இவர் பாடிய 79ஆம் பாடல் பாடி முடிய அன்னை தோன்றி தன் காதணியை வானத்தில் எறிந்து, பௌர்ணமியாக மாறிய நாள்.
அபிராமி அந்தாதி சிறப்புக்கள்:
அம்பாள் ஆலயங்களில் நூறு இழைகளால் உறி வடிவத்தில் ஒரு கூம்பு போன்ற வடிவத்தை அமைத்து அதனுள் அபிராமி பட்டரை நிற்க வைப்பர்.
தை அமாவாசை தினத்தில் அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி 100 பாடலை ஒவ்வொன்றாக பாடி முடிக்க ஒவ்வொரு இலையாக வெட்டுவர். அவரின் 78ஆவது பாடல் முடிந்து 79ஆவது பாடல் பாடல் பாடத்தொடங்கும் போது, அபிராமி தனது காதணியை எறிந்து முழு நிலவு தோன்றி பௌர்ணமி போல் காட்சி தர செய்தார் என்ற நிகழ்வின் படி, 79வது பாடல் பாடும் போது அம்பாளுக்கு விஷேச பூஜை செய்த பின் அம்பாளும், அபிராமி பட்டரும் திருவீதி உலா வருவார்கள்.
AMIRDHAKADESHWARAR
திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 47ஆவது சிவத்தலமாகும். அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த தலம். அபிராமி அந்தாதி பாடப்பட்டதும் இத்தலத்திலேயாகும். இத்தலத்தில் இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்தருளினார் என்பது தொன்நம்பிக்கை
அமைவிடம்
இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை -தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி - நாகப்பட்டினம் சாலை வழியில் இத்தலம் உள்ளது.
இறைவன், இறைவி
இக்கோயிலில் உள்ள இறைவன் அமிர்தகடேஸ்வரர்,இறைவி அபிராமி.
வழிபட்டோர்
அகத்தியர், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, பூமி தேவி முதலானோர் வழிபட்ட திருத்தலம். மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் இத்தலம் 108 வதாகவும், அருகிலுள்ள திருக்கடவூர் மயானம் 107 வதாகவும் அமைகின்றன.
சிறப்புகள்
மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் இயமனை உதைத்துத் தள்ளியதலமாதலால், மணிவிழா, பவளவிழா, சதாபிஷேகம் ஆகிய விழாக்களை இத்தலத்தில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். தை அமாவாசை திதியை அம்பிகையின் முக அழகை தரிசித்துக் கொண்டிருந்த அபிராமி பட்டர் பௌர்ணமி என்று தவறாக சரபோஜி மன்னரிடம் சொல்ல, அதனால் கோபமுற்ற மன்னரிடம் இருந்து காக்கும்படிக்கு அபிராமி அந்தாதி பாடி அமாவாசையை பௌர்ணமியாக மன்னருக்கு மாற்றிக் காட்டிய அற்புதம் நிகழ்ந்த தலம்.இங்கு நவக்கிரக சந்நிதி இல்லாதது சிறப்பாகக் கூறப்படுகிறது.60 TH ANNIVERSARY CELEBRATE FOR THIS TEMPLE.
WELCOME TO SOUTH INDIA
www.ashtalakshmitravel.in
whats app +91 8825666165
23/02/2021
SIKKAL
சிக்கல் சிங்காரவேலவர் கோவில் (Sikkal Singara Velar Temple) தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் சிக்கல் நவநீதீீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து 18 கி.மீ கிழக்கேயும், நாகப்பட்டினத்திலிருந்து 5 கி.மீ மேற்கேயும் அமைந்துள்ளது.[1] கோயிலின் ஒரு வளாகத்தில் நவநீதீஸ்வரர் சன்னதியும், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதியும், மற்றொரு வளாகத்தில் விஷ்ணுவின் சன்னதியும் அமைந்துள்ளது.
கோவிலின் சிறப்பு
சிக்கல் சிங்காரவேலர் சன்னதி மிகப்பழமை வாய்ந்த இந்துக்கோவில் ஆகும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத முருகனின் ஏழாவது படைவீடாகும். சிவனும், விஷ்ணுவும் ஒரே இடத்தில் அமைந்துள்ள அரிய தொன்மையான இந்துக்கோவிலாகும். சிக்கலில் பார்வதியிடம் முருகன் வேல் பெற்றுத் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார்.
கோவில் வளாகம்
முற்காலத்தில் இது மல்லிகை வனமாக இருந்ததால் காமதேனு குடி கொண்டிருந்ததாக ஐதீகம். புலால் உண்டதால் சிவனால் காமதேனு சபிக்கப்பட்டார். தன் தவற்றை உணர்ந்து இங்குள்ள பாற்குளத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டதால் சாபவிமோசனம் அடைந்ததாக வரலாறு உண்டு.
ETTUKUDI
நாகை மாவட்டத்தில் உள்ள அருமையான கந்த க்ஷேத்திரங்களில் எட்டுக்குடி திருத்தலமும் ஒன்று. சுமார் 800 வருடப் பழைமை வாய்ந்த தலம் இது. வன்னி மரத்தை தல விருட்சமாகவும் சரவணப் பொய்கையை தீர்த்தமாகவும் கொண்ட ஆலயம் எனும் சிறப்பிற்குரியது. நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் 20 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி ஸ்ரீசுப்ரமணியசுவாமி. குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தை வடிவிலும், முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிகராகவும் காட்சி தருவார். கோயில் முன்பு உள்ள சரவணப்பொய்கை தீர்த்தத்தில் நம் கைபட்டாலே பாவமெல்லாம் நிவர்த்தியாகி விடும் சிறப்புடையது என்பது ஐதீகம். சவுந்தரநாயகர், ஆனந்தவல்லி அம்பாள் ஆகியோர் முருகனின் தாய்-தந்தையாக அருள்பாலிக்கின்றனர்.
பயந்த சுபாவமுடைய குழந்தைகளை இங்கு அழைத்து வந்தால் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இங்கு முருகன் அம்பறாத் துணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் வீர சௌந்தரியம் உடையவனாக திகழ்கிறார். சூரனை அழிப்பதற்காக உள்ள இக்கோலம் பற்றி குழந்தைகளுக்கு விளக்கிச் சொன்னால் அவர்கள் ஆற்றல் உடையவர்களாக திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
நாகப்பட்டினம் அருகில் உள்ள பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் தெய்வத்தன்மை வாய்ந்த சிற்பி ஒருவன் இருந்தான். “சரவணபவ’ என்ற ஆறெழுத்து மந்திரத்தை ஓதியபடியே வேலை செய்யும் வழக்கம் உண்டு அவனுக்கு! அளப்பரிய முருக பக்தி கொண்டவன் அவன்!
அழகிய ஆறுமுகம் கொண்ட வேலவன் சிலையைச் செய்தான். அப்போது ஆட்சியில் இருந்த பராந்தக சோழ மன்னன், அந்தச் சிலையின் அழகைப்பார்த்து ஆனந்தம் கொண்டான். இது போல இன்னொரு சிலையை செய்யக்கூடாது என்பதற்காக, அந்த சிற்பியின் கட்டைவிரலை வெட்டி விட்டான். அவன் வருத்தத்துடன் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு வந்தான். கைவிரல் இல்லாத நிலையிலும் கடுமையான முயற்சியும் பயிற்சியும் எடுத்து மற்றொரு சிலையை செய்தான். அதை அந்த ஊரை ஆட்சி செய்த குறுநில மன்னன் முத்தரசன் பார்த்தான்.
அந்தச் சிலையிலிருந்து ஒளி வீசியது. வேலை நிறைவு பெற்றதும் சிலைக்கு உயிர் வந்து, முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பித்தது. மன்னன் அந்த நேரத்தில் வர அதை “எட்டிப்பிடி’ என உத்தரவிட்டான். காவலர்கள் மயிலைப் பிடித்தனர். அதன் கால்களை சிறிதளவு உடைத்தனர். அதன் பின் மயில் சிலையாகி அங்கேயே நின்று கொண்டது. எட்டிப்பிடி என்ற வார்த்தை காலப்போக்கில் எட்டிக்குடி என மாறி, தற்போது எட்டுக்குடி ஆனது. அதுவே ஊரின் பெயராகவும் நிலைத்து விட்டது.
இதே சிற்பி மற்றொரு சிலையையும் வடித்தான். அதை எண்கண் என்ற தலத்தில் வைத்தான். சிற்பி முதலில் வடித்த சிலை சிக்கலிலும், அடுத்த சிலை எட்டுக்குடியிலும் வைக்கப்பட்டது. இந்த மூன்றுமே உருவத்தில் ஒரே தோற்றம் கொண்டவை என்பது குறிப்பிடத் தக்கது.
சித்ரா பௌர்ணமி திருவிழா இங்கு பத்து நாட்கள் நடக்கும். பவுர்ணமி நாளுக்கு முந்தைய நாளே நடை திறக்கப்பட்டு பாலபிஷேகம் துவங்கும். பௌர்ணமிக்கு மறுநாள் வரை தொடர்ந்து நடை அடைக்காமல் பாலபிஷேகம் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். தேரோட்டம் நடத்தப்படும்.
ஐப்பசியில் கந்த சஷ்டி விழா ஆறு நாட்களும், வைகாசி விசாகம் ஒரு நாளும் விழாவாக நடத்தப்படும். உள்ளிருக்கும் அம்மையப்பனுக்கு மார்கழி திருவாதிரையில் விழா எடுக்கப்படும். இது தவிர மாத கார்த்திகைகளில் சிறப்பு பூஜை உண்டு. சிறப்பு பூஜை: இங்கு சத்ரு சம்ஹார திரிசதை எனும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. எதிரிகளால் ஏற்படும் துன்பம் தீர இந்த பூஜையை நடத்தினால் பலன் கிடைக்கும்!
தைப்பூசத் திருவிழாவின் போது முருகப்பெருமானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்துவாகள். சுவாமிக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் வழிபடுவார்கள். குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க எட்டுக்குடி முருகனை பிரார்த்தியுங்கள்!
ENGAN
எண்கண் முருகன் கோயில் இந்து மதம் கடவுள் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இது தமிழ்நாடு திருவாரூர் மாவட்டதில் அமைந்துள்ள எண்கண் கிராமத்தில் உள்ளது. இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். திருவாரூரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் எண்கண் அமைந்துள்ளது.
புராண வரலாறு
எண்கண் முருகன் கோயில்
பிரபலமான நாட்டுப்புறக் கதைகளின்படி, இந்த கோவிலில் முருகன் சிலையை செதுக்கிய சிற்பி, சிக்கல் மற்றும் எட்டுகுடி ஆகிய இடங்களில் சிற்பத்தை செதுக்கிய அதே நபர் எனப்படுகிறது. சிக்கலில் சிலை சிற்பம் செய்தபின், அச்சிற்பி தனது வலது கட்டைவிரலை வெட்டிகொண்டார், அதனால் அவர் சிக்கலில் உள்ள உருவத்தின் அழகை மிஞ்சும் எதையும் எங்கும் உருவாக்க மாட்டார் என்பதை உறுதிசெய்தார். எட்டுகுடி சிலை வடிவத்தை சிற்பிய பிறகு, அவர், அதன் அழகு சிக்கலில் உள்ள சிற்பத்தை மிஞ்சியதாக உணர்ந்து, தன்னை தண்டித்துக்கொள்ள தன் கண்களை குருடாக்கிக்கொண்டார். ஆகவே அவர், எங்கணில் முருகனின் சிலையை சிற்பம் போது, ஒரு பெண்ணின் உதவியை நாடினார். அப்போது தவறி அவர், அந்தப் பெண்ணின் ஒரு விரலை வெட்டி, இரத்தம் வெளியேற தொடங்கியது. இந்த இரத்தத் துளிகள் அவரது கண்களில் விழுந்து அவரது கண்களை குணப்படுத்தியது. சிற்பி பார்க்கமுடிவதை உணர்ந்தவுடன், ஆச்சரியத்துடன் "எங்கண்!" தமிழ் மொழியில் "என் கண்கள்" என்று பொருள்.THIS ARE ALL TEMPLE SEE AT THE SAME DAY,AFTER SEE YOUR LIFE TURNING POINT.
www.ashtalakshmitravels.in
whats app +91 8825666165
Address
Chennai
603103
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when WellCredit Lip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to WellCredit Lip:
Shortcuts
Category
Other Tour Agencies in Chennai
-
Kasturibai Nagar 1st Main Road
-
Chennai Bypass
-
Clc Works Road
-
Sankaralinganar Street
-
1st Floor Mannady Street
-
T H Road
-
SR Travels and Cargo Solutions
Natesan Nagar 3rd Main Road -
chennai
-
Second Extension 1st Street Vgp Selva Nagarvvelachery
-
Chennai
-
600118
-
Natesan Nagar First Main Road