Fans Of Uvari

Fans Of Uvari உவரி எனும் அழகிய பூமியின் பிரியர்கள்

 #நிறைவடைந்தது_தசராதிருவிழா..!!!உலகப்புகழ்பெற்ற  #குலசேகரன்பட்டினம் தசராதிருவிழா சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது...! அனை...
13/10/2024

#நிறைவடைந்தது_தசராதிருவிழா..!!!

உலகப்புகழ்பெற்ற #குலசேகரன்பட்டினம் தசராதிருவிழா சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது...!

அனைத்து தொழில்வளங்களும், மழை வளமும் செழிக்க அன்னை அருள்புரியட்டும்...!

அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

அன்புடன்...

உவரி ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை

Photo Credits :

2025 ஆண்டிற்கான  #திருவிழா அறிவிப்பு!பாரதப்பதுவை  #உவரி கோடிஅற்புதர் புனித அந்தோனியார் திருத்தல பெருவிழா - 2025.!!!கொடிய...
28/01/2024

2025 ஆண்டிற்கான #திருவிழா அறிவிப்பு!

பாரதப்பதுவை #உவரி கோடிஅற்புதர் புனித அந்தோனியார் திருத்தல பெருவிழா - 2025.!!!

கொடியேற்றம் - 04.02.2025
திருத்தல பெருவிழா - 15.02.2025.

 #உவரி தெப்பகுளத்தில் மண்டபம் மூழ்கி அதற்கு மேல் 10 அடி உயர ஆழத்திற்கும் மேலாக தண்ணீர் நிரம்பியுள்ளது.பக்தர்கள் தெப்பகுள...
16/01/2024

#உவரி தெப்பகுளத்தில் மண்டபம் மூழ்கி அதற்கு மேல் 10 அடி உயர ஆழத்திற்கும் மேலாக தண்ணீர் நிரம்பியுள்ளது.

பக்தர்கள் தெப்பகுளத்தில் குளிப்பதை முற்றிலும் தவிர்க்கவும்..!!!

 #உவரி நோக்கி.....தென்தமிழகத்தில் புகழ்பெற்ற திருத்தலங்களான  #உவரி அந்தோனியார் கோவில் மற்றும்  #உவரி சுயம்புலிங்கசுவாமி ...
16/01/2024

#உவரி நோக்கி.....

தென்தமிழகத்தில் புகழ்பெற்ற திருத்தலங்களான #உவரி அந்தோனியார் கோவில் மற்றும் #உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் திருவிழாக்கள் இன்றும் நாளையும் கோலாகலமாக தொடங்குகிறது..!

உவரி அந்தோனியார் கோவில் :

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் திசையன்விளை அருகே உள்ள உவரி புனித அந்தோணியார் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

----------------------------------------------------------------------

தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் பழமையானது நெல்லை மாவட்டம் #திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் ஆகும்.

இந்த கோவிலில் சுவாமி லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இக்கோவிலில் வைகாசி விசாகம், தைத்தேரோட்டம் முக்கிய விழாக்களாகும்.

இவ்விழாவின் திருக்கொடியேற்றம் நாளை தை 3 (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், நெல்லை, திசையன்விளையில் இருந்து உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

நாளை தை 3 (17.01.2024 - புதன்கிழமை) காலை 9 மணியளவில்  #உவரி அருள்மிகு ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி திருக்கோவில்  #தைத்திருவிழ...
16/01/2024

நாளை தை 3 (17.01.2024 - புதன்கிழமை) காலை 9 மணியளவில் #உவரி அருள்மிகு ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி திருக்கோவில் #தைத்திருவிழா திருக்கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.

நெல்லை மாவட்டம், #திசையன்விளை வட்டம், #உவரி ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி திருக்கோவில் #தைத்திருவிழா - 2024.!

நமது திருக்கோயிலில் பல ஆண்டுகளாக தைத்திருவிழா இறை கருணையால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் இந்த ஆண்டும் தைப்பூசத் திருவிழா, பெருவிழாவாக வரும் தை 03 (17-01-2024 / புதன்கிழமை) முதல் தை 12 (26-01-2024/வெள்ளிக்கிழமை வரை நடைபெற இறையருள் கூடியுள்ளது.

விழாக்காலமான பத்து நாட்களும் இறைவனும் இறைவியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து கருணையைப் பொழியவுள்ளனர்.

பக்த பெருமக்கள் பிரானையும் பிராட்டியையும் தரிசித்து இறையின்பத்தில் மகிழ உவரி திருத்தலம் வருக...!

#உவரி_தைத்திருவிழா2024

திருச்சிற்றம்பலம்.!!!

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

நன்றி!

இறைபணியில்...
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி - திருநெல்வேலி மாவட்டம்.

என்றும் அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

இன்று (16.01.2024 - செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு  #உவரி கோடிஅற்புதர் புனித அந்தோனியார் உயர் திருத்தல  பெருவிழாவை முன்...
16/01/2024

இன்று (16.01.2024 - செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு #உவரி கோடிஅற்புதர் புனித அந்தோனியார் உயர் திருத்தல பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு. நசுரேன் ஆண்டகை தலைமையில் நடைபெறும்.

இரவு 9 மணிக்கு புனித சகாய அன்னை சங்கீத சபாவின் பாமாலை பாடல்கள், இன்னிசை முழங்க பேராலய வளாகத்தில் அரங்கேற்றம்.

இறை ஆசிர் பெறவும்! புனிதரின் பரிந்துரைக்காகவும் பக்த கோடிகளை வரவேற்று மகிழுகிறோம்....

Repost from புனிதஅந்தோனியார் கலா நற்பணிமன்றம், உவரி.

 #உவரி கோடிஅற்புதர் புனித அந்தோனியார் திருத்தல பெருவிழா 2024..!!!
06/01/2024

#உவரி கோடிஅற்புதர் புனித அந்தோனியார் திருத்தல பெருவிழா 2024..!!!

நெல்லை மாவட்டம்,  #திசையன்விளை வட்டம்,  #உவரி ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி திருக்கோவில்  #தைத்திருவிழா - 2024.!நமது திருக்கோய...
06/01/2024

நெல்லை மாவட்டம், #திசையன்விளை வட்டம், #உவரி ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி திருக்கோவில் #தைத்திருவிழா - 2024.!

நமது திருக்கோயிலில் பல ஆண்டுகளாக தைத்திருவிழா இறை கருணையால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் இந்த ஆண்டும் தைப்பூசத் திருவிழா, பெருவிழாவாக வரும் தை 03 (17-01-2024 / புதன்கிழமை) முதல் தை 12 (26-01-2024/வெள்ளிக்கிழமை வரை நடைபெற இறையருள் கூடியுள்ளது.

விழாக்காலமான பத்து நாட்களும் இறைவனும் இறைவியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து கருணையைப் பொழியவுள்ளனர்.

பக்த பெருமக்கள் பிரானையும் பிராட்டியையும் தரிசித்து இறையின்பத்தில் மகிழ உவரி திருத்தலம் வருக...!

#உவரி_தைத்திருவிழா2024

திருச்சிற்றம்பலம்.!!!

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

நன்றி!

இறைபணியில்...
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி - திருநெல்வேலி மாவட்டம்.

என்றும் அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

 #உவரி கடற்கரையில்  #பாரிவேட்டை.!கடற்கரையில் வெள்ளிக்குதிரையில் சுவாமி எழுந்தருளும் அருள்நிரை காட்சி..!!!ஐப்பசி 7, (24-1...
23/10/2023

#உவரி கடற்கரையில் #பாரிவேட்டை.!

கடற்கரையில் வெள்ளிக்குதிரையில் சுவாமி எழுந்தருளும் அருள்நிரை காட்சி..!!!

ஐப்பசி 7, (24-10-2023) #செவ்வாய்க்கிழமை.

ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி திருக்கோவில்,
உவரி - திருநெல்வேலி மாவட்டம்..!!!

ஐப்பசி 7, மாலை 4 மணி முதல் நவராத்திரி மாநோன்பு பாரிவேட்டை பெருவிழா (விஜயதசமி) - 2023.!!!

நவராத்திரியின் சிகர நிகழ்ச்சியாக வரும் செவ்வாய்க்கிழமை (24-10-2023) விஜயதசமியன்று பாரிவேட்டை நமது திருக்கோயில் கடற்கரையில் வைத்து நடைபெறும்.

பக்தபெருமக்கள் இறையருளில் மகிழ அனைவரும் உவரி திருத்தலம் வருக...!

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

இறைபணியில்...
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி - திருநெல்வேலி மாவட்டம்.

என்றும் அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

அனைவருக்கும்  #வேண்டுகோள்:சிறுவர்கள் மற்றும் நீச்சல் தெரியாதவர்கள் கடலில் குளிப்பதை முற்றிலும் தவிர்க்கவும். திருக்கோவில...
16/08/2023

அனைவருக்கும் #வேண்டுகோள்:

சிறுவர்கள் மற்றும் நீச்சல் தெரியாதவர்கள் கடலில் குளிப்பதை முற்றிலும் தவிர்க்கவும்.

திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முடிந்தவரை கிணறு மற்றும் தெப்பகுளத்தை நீராடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளவும். திருக்கோவில் நிர்வாகம் கிணற்றை சுத்தப்படுத்தி, பக்தர்கள் அனைவரும் எப்போதும் பயன்படுத்தும் வகையில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

நமது கடல் பகுதியில் அலைகளின் சீற்றம் கணிக்க முடியாததாக உள்ளது. காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால் கவனமுடன் இருக்கவும்.

கடலில் நீராடும் பக்தர்கள், ஆழமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.

திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடும்போது கரையோரமாக பாதுகாப்பாக நீராடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள கடல் பகுதி ஆழமானதாகும். கடலில் நீராட செல்லும் பக்தர்கள் கடலுக்குள் நீண்ட தூரம் செல்ல வேண்டாம்.

உவரியில் கடலில் குளிப்பவர்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கவனமுடன் இருக்கவும். குழந்தைகளை கடலில் இறங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தூண்டில் வளைவின் மேல் நின்று சாகசம் செய்வது, Selfi எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். கடலின் ஆழமான பகுதிகளுக்கு செல்லாதீர்.

திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முடிந்தவரை கிணறு மற்றும் தெப்பகுளத்தை நீராடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளவும். நமது கடல் பகுதியில் அலைகளின் சீற்றம் கணிக்க முடியாததாக உள்ளது. காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால் கவனமுடன் இருக்கவும்.

சிறுவர்கள் மற்றும் நீச்சல் தெரியாதவர்கள் கடலில் குளிப்பதை முற்றிலும் தவிர்க்கவும்.

பின்குறிப்பு :

திசையன்விளை, #உவரி அருகே கடலில் குளித்தபோது மாயமான 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர், என்று அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

நவ்வலடியில் கடலில் குளித்தபோது மாயமான ஆகாஷ், ராகுல், முகேஷ் ஆகியோரை தேடும் பணி நடைபெற்றது. இந்த நிலையில், மூன்று பேரின் உடல்களும் கரை ஒதுங்கின. ஒரே நேரத்தில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது நம்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திசையன்விளை,  #உவரி அருகே கடலில் குளித்தபோது மாயமான 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர், என்று அதிர்ச்சி செய்தி வெளியாகிய...
16/08/2023

திசையன்விளை, #உவரி அருகே கடலில் குளித்தபோது மாயமான 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர், என்று அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

நவ்வலடியில் கடலில் குளித்தபோது மாயமான ஆகாஷ், ராகுல், முகேஷ் ஆகியோரை தேடும் பணி நடைபெற்றது. இந்த நிலையில், மூன்று பேரின் உடல்களும் கரை ஒதுங்கின. ஒரே நேரத்தில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளெல்லாம் பரமனுக்கு  #திருநாளே..!பிரதோஷ நாளில் உவரிக்கு சுற்றுவட்டார ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் சுவாமி தரி...
26/07/2023

நாளெல்லாம் பரமனுக்கு #திருநாளே..!

பிரதோஷ நாளில் உவரிக்கு சுற்றுவட்டார ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம், பஜனைகளில் பங்கு பெற்று அருளைப் பெறுவர்.

அந்த வகையில் ஆடி மாதத்திற்கான பிரதோஷ வழிபாடு வருகிற ஆடி 14 ஞாயிற்றுக்கிழமை (30.07.2023) அன்று நடைபெறுகிறது. அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சுவாமியின் அருளைப் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

பிரதோஷ வழிபாடு :

காலை 4.30 மணி - நடைத்திறப்பு.
காலை 6 மணி - உதயமார்த்தாண்ட பூஜை.
மதியம் 11:30 மணி - உச்சிக்கால பூஜை.
மதியம் 12 மணி - அன்னதானம்.
மாலை 4.00 மணி - பஜனை வழிபாடு.
மாலை 5 மணி - அபிஷேக ஆராதனைகள்.
மாலை 5.15 மணி - சுவாமி வீதிஉலா.
மாலை 5.30 மணி - பிரசாதம் வழங்குதல்.
இரவு 7 மணி - சாய்ரஷ்சை பூஜை.
இரவு 8:30 மணி - அர்த்தசாம பூஜை.
இரவு 9 மணி - நடை திருக்காப்பிடுதல்.

உவரி அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி திருக்கோயிலில் பிரதோஷம் தோறும் மாலை கூட்டுவழிபாடு (பஜனை) இறை அருளால் வெகு சிறப்பாக பல வருடங்கள் நடந்து வருகின்றது.

திருமுறைப் பாடல்களை அன்பர்கள் பாடுவதைக் கேட்கக் கேட்க நமது உள்ளம் இறை அருளினால் நிரம்பி அமைதியில் மகிழ கூட்டுவழிபாட்டில் உணர்வது கண்கூடு.

மாலை 5 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சுவாமி- அம்பாள் #விடை வாகனத்தில் வீதி உலா வரும் அருள்நிரை காட்சிகளும் நடைபெறும்.

பக்தர்கள் அனைவரும் உள்ளத்தை அமைதியில் அமிழ்த்தும் திருமுறைப் பாடல்களைப் பாடும் இந்த பிரதோஷ வழிபாட்டில் கலந்து, விடை வாகனத்தில் சுவாமி-அம்பாளைக் கண்டு இறை அருளைப் பெற #உவரி திருத்தலம் வருக...!

அனைவரும் வருக! அய்யன் அருள் பெறுக!

திருச்சிற்றம்பலம்.!!!

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

நன்றி!

இறைபணியில்...
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி - திருநெல்வேலி மாவட்டம்.

என்றும் அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

உவரி உட்பட வட்டார 23 கிராமங்களுக்கு  #திசையன்விளை தான் தலைநகராகவே விளங்கிவருகிறது. மினி திருநெல்வேலி என்று அழைக்கப்படும்...
04/07/2023

உவரி உட்பட வட்டார 23 கிராமங்களுக்கு #திசையன்விளை தான் தலைநகராகவே விளங்கிவருகிறது. மினி திருநெல்வேலி என்று அழைக்கப்படும் அளவிற்கு வளர்ந்து உள்ளது, இதனை நமது மக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும். திசையன்விளை மேலும் வளர வேண்டும்.

Post from : Uvari A M Kutti

உவரிக்கு திசையன்விளையிலிருந்து செல்ல இரவு 8.30 மணிக்கு மேல் பஸ் வசதி இல்லை. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோ மற்றும் டிரக்கரில் செல்ல வேண்டும் என்றால் 250ரூபாய் கேட்கிறார்கள். உவரி சுயம்புலிங்க சுவாமி மற்றும் அந்தோனியார் கோவிலுக்கு தரிசனத்திற்காக வெளியூரில் இருந்து வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலஉவரி மற்றும் கீழஉவரியில் சுமார் 1000 குடும்பங்கள் உள்ளது. 1மணி நேரத்திற்கு 1பஸ் வசதி போதுமானது, அதேபோல் அந்தோனியார் கோயில் அமைந்துள்ள #உவரி பஞ்சாயத்தில் சுமார் 3000 குடும்பங்கள் உள்ளது. உவரி மற்றும் க.உவரி மக்களும் இதே கொடுமைக்கு ஆளாகிறார்கள் உடனடியாக நடவடிக்கை தேவை.

சுமார் 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கொண்ட உவரி மாநகர், உவரி கப்பல் மாதா பேராலயமும் கொண்டது.
கடல் தொழிலுக்கான பல்வேறு பொருட்கள் வாங்க திசையன்விளை சென்றால் திரும்ப பேருந்து இல்லை..

அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் காலை 6 மணி முதல் 8 மணி வரை ஒரு பேருந்தும் இல்லை. இதையும் சரி செய்ய வேண்டும்.

Repost from :

உவரிஎழிலன் Lingarajan Fans Of Uvari உவரி ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை Uvari St Antony's Shrine

இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.! #உவரி விசாகத் திருவிழாவில் வழக்கம்போல் இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றன...
02/06/2023

இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.!

#உவரி விசாகத் திருவிழாவில் வழக்கம்போல் இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

உவரி திருக்கோவிலில் விசாகம், தைத்திருவிழா என இரண்டு மிகப்பெரிய விழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இதில் முதல் முக்கிய திருவிழாவான வைகாசி விசாகத்திருவிழா இன்று நடைபெற்று வரும் நிலையில்... கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இறைபணியில்...
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி - திருநெல்வேலி மாவட்டம்.

அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

 #உவரி வைகாசி  #விசாகத்திருவிழா..!!!குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களில் பெரும்பாலானவர்களுக்கும்,தென்காசி, விருது...
02/06/2023

#உவரி வைகாசி #விசாகத்திருவிழா..!!!

குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களில் பெரும்பாலானவர்களுக்கும்,

தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் தென்தமிழகத்தின் சில மாவட்டங்களில் பலருக்கும் குலதெய்வமாகவும்.... பக்தர்கள் பலருக்கும் இஷ்ட தெய்வமாகவும் விளங்கும் உவரி அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி - ஸ்ரீபிரம்மசக்தி அம்பாள் திருக்கோவில் வைகாசி விசாகப்பெருந்திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இறைபணியில்...
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி - திருநெல்வேலி மாவட்டம்.

அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

 #உவரி வைகாசி விசாகத்திருவிழாவில் பக்தர்களுக்கு அன்பான வேண்டுகோள்.!கடந்த ஆண்டில் சுமார் 7.5 இலட்சம் மக்கள் பங்கேற்ற புகழ...
01/06/2023

#உவரி வைகாசி விசாகத்திருவிழாவில் பக்தர்களுக்கு அன்பான வேண்டுகோள்.!

கடந்த ஆண்டில் சுமார் 7.5 இலட்சம் மக்கள் பங்கேற்ற புகழ்பெற்ற #உவரி திருக்கோவில் #விசாகத்திருவிழா இந்த மூன்று நாட்களும் சிறப்பாக நடைபெறுகிறது.

பக்தர்கள் கீழ்கண்ட விதிகளையும் மற்றும் அறிவுரைகளையும் பின்பற்றி நடக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கடலில் நீராடும் பக்தர்கள், ஆழமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.

1. திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடும்போது கரையோரமாக பாதுகாப்பாக நீராடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள கடல் பகுதி ஆழமானதாகும். கடலில் நீராட செல்லும் பக்தர்கள் கடலுக்குள் நீண்ட தூரம் செல்ல வேண்டாம்.

2. திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காவல்துறையால் ஒழுங்குபடுத்த பட்டுள்ளவாறு ஒரு வழிப் பாதையை பின்பற்றி நடந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

3. பக்தர்கள் திருக்கோயிலுக்கு வரும் போது பிறபக்தர்களுக்கு இடையூறு ஏற்படும்படியோ பிறர் மனம் புண்படும்படியோ நடந்து கொள்ள கூடாதென வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

4. நம்முடனே கள்வர்களும் இருப்பர் இதனை உணர்ந்து நம் உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்ள விழிப்புடன் இருங்கள்.

5. மதிப்புமிக்க நகைகளை நாமோ, குழந்தைகளோ அணிந்து கூட்ட நெரிசலில் வருவதை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.

இறைபணியில்...
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி - திருநெல்வேலி மாவட்டம்.

6. செல்போன் போன்ற நமது உடமைகளை அறிமுகமில்லாத பிறரிடம் கொடுத்து பயன்படுத்தவோ அல்லது பாதுகாத்துக் கொள்ளவோ கொடுக்கவேண்டாம். மேலும் நாளை மாலை நேரங்களில் Network Traffic Problem ஏற்பட வாய்ப்பு உள்ளது. தங்கள் குடும்பங்களுடன் கூட்ட நேரங்களில் சேர்ந்தே இருங்கள்.

7. நண்பர்கள் போலவோ உறவினர்கள் போலவோ பேசும் நபர்களை கூட்ட நேரத்தில் தவிர்த்து விடுங்கள்.

8. திருக்கோயிலை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

9. திருக்கோயில் மற்றும் பக்தர்கள் நெருக்கடி ஏற்படும் இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. எனவே தவறு செய்வோர் மீது காவல்துறையால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

10. #உவரியில் வாகனநெரிசலை தவிர்க்க பக்தர்களுக்கு அன்பான வேண்டுகோள்.!

விசாகத் திருவிழாவிற்கு வாகனங்களில் வரும் பக்தர்பெருமக்கள் மிகவும் கவனமாக செல்லவும். இன்றும் நாளையும் உவரி திருவிழாவிற்கு வருபவர்கள் வாகனநெரிசல் அதிகமாக காணப்படும் என்பதால் கவனமுடனும், மெதுவாகவும் வாகனங்களை ஓட்டிச்செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இறைபணியில்...
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி - திருநெல்வேலி மாவட்டம்.

என்றும் அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

உவரி விசாகத்திருவிழாவில் பக்தர்களுக்கு அன்பான வேண்டுகோள்.!

விசாகத் திருவிழாவிற்கு வாகனங்களில் வரும் பக்தர்பெருமக்கள் மிகவும் கவனமாக செல்லவும். இன்றும் நாளையும் உவரி திருவிழாவிற்கு வருபவர்கள் வாகனநெரிசல் அதிகமாக காணப்படும் என்பதால் கவனமுடனும், மெதுவாகவும் வாகனங்களை ஓட்டிச்செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாகர்கோயில் - உவரி, திருச்செந்தூர் - உவரி, மற்றும் திசையன்விளை - உவரி சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்கி, மக்கள் இந்த நல்ல நாளில் நல்ல முறையில் மனநிம்மதியுடன் இறைவனை வணங்க பொறுமையுடனும், சுயகட்டுப்பாட்டுடனும் வந்து இறைவன் அருள் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

உவரியில் கூட்டநெரிசலை தவிர்க்க இன்றும் நாளையும் வாகனங்களை இடையூறு இல்லாமல் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். அனைவருக்கும் விசாகத் திருவிழா நல்வாழ்த்துக்கள்.

உவரியில் கடலில் குளிப்பவர்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கவனமுடன் கடலில் குளிக்கவும். கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் தங்கள் உடைமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். குழந்தைகளை கடலில் இறங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தூண்டில் வளைவின் மேல் நின்று சாகசம் செய்வது, Selfi எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். கடலின் ஆழமான பகுதிகளுக்கு செல்லாதீர்.

கவனமுடன் செயல்பட்டு இனிய திருநாளை மனமகிழ்வுடன் கொண்டாடுவோம்.

நன்றி!!!

இறைபணியில்...
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை.

கோவில் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள், கடற்கரை, வாகன நிறுத்தங்கள், சாலை சந்திப்புகள் ஆகிய இடங்களில் மறைவாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவைகளின் மூலம் பக்தர்கள் வடிவில் வரும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் பார்வையிட்டு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பாதுகாப்பு மற்றும் திருட்டு நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டுவர கடற்கரை மற்றும் மக்கள் கூடும் இடங்களில் காவலர்கள் அவர்களை கண்காணிக்கும் விதமாக சீருடை மற்றும் சாதாரண உடைகள் அணிந்த ஆண், பெண் காவலர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.

பக்தர்களின் பொது நலனுக்காக காவல்துறை மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்தர்களும் பொது மக்களும் கட்டுப்பட்டு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும்.

இறைபணியில்...
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி - திருநெல்வேலி மாவட்டம்.

என்றும் அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

 #உவரி வைகாசி  #விசாகத்திருவிழா.!"மாட்டு வண்டிகளின் அணி வகுப்பைக் காணக் கொடுத்துவைக்க வேண்டும்" மாசி மாதம் துவங்கி பங்கு...
26/05/2023

#உவரி வைகாசி #விசாகத்திருவிழா.!

"மாட்டு வண்டிகளின் அணி வகுப்பைக் காணக் கொடுத்துவைக்க வேண்டும்"

மாசி மாதம் துவங்கி பங்குனி, சித்திரை வரைக்கும் பல்வேறு ஊர்களில் கொடை விழா நடத்தி வைகாசி விசாகத்திற்கு உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கிராமத்து மக்கள் செல்வது வழக்கம். அந்த காலம் மாட்டு வண்டி கட்டி அடிப் பக்கம் கூடையில் மாம்பழம் , கட்டு சோறும் கட்டி வழி நெடுக பொங்கி சாப்பிட்டு செல்லும் வழக்கத்தை மறக்க முடியாது.!!!

'வெள்ளையுள் சொள்ளையுமாக' உடுத்திய ஆண், பெண், மாட்டின் வேகநடைக்கு ஏற்ப எட்டி நடக்கும் இளவட்டங்கள், அத்தனை முகங்களிலும் ஆனந்தம் பொங்கும், அதைக் காண்போர் மனமும் ஆனந்தமாகவே இருக்கும்! உவரிக்கு சென்று தங்கி சாமி கும்பிட்டு திருவிழா கூட்டம், வேடிக்கைகள், இரவு டிராமா, கச்சேரி வாகனப் பவனி......

பொங்கி சாப்பிட்டு, தெரிந்தவர்களோ உறவினர்களோ வந்தால் அவர்களுக்கும் மனமுவந்து விருந்தளித்து மனதுக்குள் ரொம்பவும் ஆனந்தம் சந்தோஷம் உற்சாகம் போன்ற உணர்வுகளில் ஒரு வருடத்திற்கான சக்தி ரீசார்ஜ் ஆகிவிட்டதுபோல இருக்கும்.

விசாகம் முடிந்த மறுநாள் முதல், வண்டிகள் திரும்பிவரத்தொடங்கும். போனபோது இருந்த உற்சாகம் மறைந்து தூங்குமூஞ்சியாக மனிதர்கள்.... எதிர்வரும் பேரூந்துகளுக்கு தாங்களாகவே வழிவிட்டு நடக்கும் வண்டி மாடுகள்.... சுமார் ஒரு வாரமாவது வண்டிகள் திரும்பி வருவதைப் பார்க்க கிடைக்கும்! காணக் கொடுத்து வைத்த சுயம்புலிங்கசுவாமிக்கு கோடான கோடி நன்றிகள்! அப்பனாகவும் தாத்தாவாகவும் பக்தர்களாகிய எங்களோடு இருந்து எங்களைவாழவைக்கும் சுவாமியே இந்த கொரோனா கொடியனை இன்னும் ஏன் கண்டும் காணாமல் இருக்கிறீர்? மக்கள் அனைவருக்கும் அமைதியும் நிம்மதியுமான வாழ்க்கையைத் தாரும்!

மாட்டு வண்டியில் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே செல்ல துவங்கி விடுவார்கள். வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தனது வாகனத்தில் இலவசமாக பக்தர்களை அழைத்து செல்வார்கள்.

வழியில் #கூடன்குளம் சிரட்டைப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று அவரையும், சுடலைமாடனையும் மனம் உருக வணங்கி தங்கள் குறைகளை எடுத்துக்கூறி ஆறுதலைப்பெற்று அம்மனிடம் வழிபாடு செய்து தேங்காய் உடைத்து, அதில் தேங்காயை மட்டும் எடுத்துச் கொண்டு சிரட்டையை கோவிலிலேயே விட்டு விடுவர்.

ஆலயத்தில் சுடலைமாடசுவாமியின் அருள் பெற்று மீண்டும் மக்கள் புறப்படுவர். விசாகத்திற்கு முந்தைய நாள் காலைப்பொழுது புலரும் வேளையில் நாட்டாறு கடந்து பத்திரகாளியம்மன் கோவில் வந்து சேர்வார்கள். அங்கே காலையில் பல் துலக்கி, அம்மனை வழிபட்டு, பதநீர் அருந்தியபின் உவரி வந்து சேர்வார்கள், முற்காலத்தில் உவரி செல்லும் வழி முழுவதும் இலவசமாக பதநீர் குடிக்க கிடைக்கும்.

வழி நெடுக கனி வகைகளை உண்டு மகிழ்வார்கள்.குறிப்பாக இது கோடை காலம் மாம்பழம் அதிகம் கிடைக்கும் கால மாதலால் மாம்பழம், வாழைப்பழமும் சாப்பிடுவார்கள். முற்காலத்தில் மட்டுமின்றி இன்றும் ஏராளாமான மக்கள் விசாக நேரத்தில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து உவரி சுயம்புநாதரை வந்து வழிபடுகின்றனர்.

தொகுப்பு..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

உவரி விசாகத்திற்கு வரும் மக்கள் விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் தங்கமாகிய கடல் மண்ணை எடுத்து சுயம்பு நாதர் ஆலயத்தின் அருகில் தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து குவிப்பார்கள். இதனால் தீரும் பாவ வினைகளும், நோய்களும், கஷ்டங்களும் ஏராளம். செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும்.

நினைத்த காரியங்கள் வெற்றி அடையும் சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தாருடன் நிலைத்து நிற்கும். கடல் குளித்த பின் விநாயகரை வழிபட்டு மும்முறை வலம் வந்து, சுயம்பு நாதர் ஆலயத்தை சுற்றி வந்து வணங்கி, முன்னோடியைத் தொழுது பிரம்மசக்தி அம்பாள், பேச்சியம்மன் ஆலயங்களை வலம் வந்து சாஸ்தாவை வழிபடுவார்கள்.

தெப்பக்குளம் அல்லது கிணற்று நீரில் நீராடி தூய ஆடை அணிந்து சுயம்பு நாதர் ஆயலத்தினுள் சென்று மூலஸ்தானத்தை மூன்று முறை வலம் வந்து அர்ச்சனை செய்து கொடி மரத்தைத் தொழுது பிரார்த்தனை செய்வார்கள். குமரி மாவட்ட மக்கள் உவரியில் தங்குவதற்கும்,சமையல் செய்து பரிமாறுவதற்கும், பாதுகாப்பிற்காகவும் மடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நான்கு கால பூஜையும் முடிந்த பின் உற்சவ மூர்த்தி வீதிவுலா நடைபெறும். இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்று உற்சவ மூர்த்தி ஆலயத்தினுள் எழுந்தருளும் போது விடியும் நேரம் ஆகிய விடும் அதன் பின் மக்கள் தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டுச் செல்வர். விசாகத்திற்கு மறுநாள் பவுர்ணமி ஆகும். பெரும் பான்மையான மக்கள் உவரியில் பவுர்ணமி தீர்த்தமாடி சுயம்புலிங்க சுவாமியை வழிபடுவது வழக்கம்.

பணங்கிழங்கும், வேர்க்கடலையும் வழியில் அதிகம் வாங்கிச் சாப்பிடுவர். தங்கள் உறவினர்களை எல்லாம் கண்டு கடற்கரையில் அமர்ந்து பேசி மகிழ்வர். வைகாசி விசாக திருவிழா முடிவில் ஒரு வருடத்திற்கான புண்ணியத்தை ஒரே நாளில் உவரியில் பெற்ற திருப்தி ஒவ்வொரு பக்தனுக்கும் உண்டாகும்.

இன்றும் இந்த கலாச்சார முறைகளும், விழாவினை கொண்டாடும் முறைகளும் ஓரளவுக்கு நடைமுறையில் உள்ளன.

உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமியைத் தரிசித்து, சந்தனத்தை உடலில் மணக்க மணக்கப் பூசிக் கொண்டு, கடல் காற்றை அனுபவிக்கும்போது, கவலையாவது துக்கமாவது... எல்லாம் காற்றோடு காற்றாகக் கலந்துவிடும் என்பது உறுதி!

நன்றி!!!

என்றும் அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

#உவரி வைகாசி #விசாகத்திருவிழா.!

சுவாமி உவரியில் #மகரமீனுக்கு காட்சி கொடுக்கும் திருவிளையாடல்..!

வைகாசி விசாகம் (வைகாசி - 19. 02-06-2023 - வெள்ளிக்கிழமை)

ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை - உவரி - திருநெல்வேலி மாவட்டம்.!

பேரன்புடையீர்...!

நமது திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா பல ஆண்டுகளாக இறை கருணையால் சிறப்புற நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் இந்த ஆண்டும் வரும் (வைகாசி-18 01-06-2023) மற்றும் (வைகாசி-19 02-06-2023), ஆகிய நாட்களில் விசாகத் திருவிழா, பெருவிழாவாகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

விசாகத்தை முன்னிட்டு அன்று இரவு, இறைவன் முருகனாக, சப்பரத்தில் எழுந்தருளி மகர மீனுக்குக் காட்சி தரும் அருள்பொழியும் நிகழ்ச்சி நடைபெறும்.

பக்த பெருமக்கள் வைகாசி விசாகத் திருநாளன்று பரமனைத் தரிசித்து இறையின்பத்தில் மகிழ உவரி திருத்தலம் வருக...!

இறைபணியில்....
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி-திருநெல்வேலி மாவட்டம்.

அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் பழைமையும், பெருமையும் நிறைந்தது திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில். இங்கு சுவாமி சுயம்புவாக தோன்றி அருள்புரிந்து வருகிறார்.

வைகாசி விசாக திருவிழா :

இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 1-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவிருக்கிறது.

01-06-2023 (வியாழக்கிழமை) அதிகாலை கோவில் நடை திறப்பு, தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை, இரவு சமைய சொற்பொழிவு, சுயம்புலிங்கசுவாமி வரலாறு வில்லிசை, நகைச்சுவை, திரை இசை பட்டிமன்றம் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடைபெறவிருக்கிறது.

மகர மீனுக்கு காட்சி:

வருகிற 02-06-2023-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விசாக திருவிழா அதிகாலை கோவில் நடைத்திறப்பு தொடர்ந்து பல்வேறு வகையான சிறப்பு பூஜைகள் திருவாசக முற்றோதுதல், மாலை மங்கள இசை, நாதஸ்வரம் இரவு சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை கச்சேரி, சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மகர மீனுக்கு காட்சி கொடுத்தல், வாண வேடிக்கை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது.

திருவிழாவையொட்டி நாகர்கோவிலில் இருந்து உவரிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பக்த பெருமக்கள் வைகாசி விசாகத் திருநாளன்று பரமனைத் தரிசித்து இறையின்பத்தில் மகிழ உவரி திருத்தலம் வருக...!

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

இறைபணியில்....
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி-திருநெல்வேலி மாவட்டம்.

அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

வினோத நெல்லையும்  #பீடித்தொழிலும்..கம்பெனியில் இருந்து வரும்பொழுது கருப்பட்டி , பண்டம் ஏதாவது வாங்கி வந்து குழந்தைகளுக்க...
23/05/2023

வினோத நெல்லையும் #பீடித்தொழிலும்..

கம்பெனியில் இருந்து வரும்பொழுது கருப்பட்டி , பண்டம் ஏதாவது வாங்கி வந்து குழந்தைகளுக்கு கொடுத்து அவர்கள் சிரிப்பில் தன் சிரிப்பை கண்டுகொண்ட தாய்மார்கள் போற்றப்படக்கூடியவர்களே.!

குனிந்து குனிந்து பீடி சுற்றி தங்கள் தலைமுறைகளை குனிய விடாமல் நிமிர செய்த எங்க ஊரு பெண்களிடம் படிக்க ஆயிரம் பாடங்கள் உண்டு.

பீடி தொழிலை பொறுத்தவரை மூலப்பொருட்களான இலை, புகையிலை, நூல் எல்லாமே கம்பெனியில் கொடுத்து விடுவார்கள். இவற்றை பீடியாக மாற்றி கம்பெனியில் கொடுப்பது மட்டுமே நமது வேலை. 500 அல்லது 1000 பீடி சுற்றவே ஒரு நாள் முழுவதும் முதுகு ஒடிய உக்கார்ந்து வேலை பார்க்கணும்.

காய்ந்த இலையை நனைத்து சாக்கு அல்லது ஈரத்துணியில் சுற்றி அதன் ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்க வேண்டும். ஈரமாக இருந்தால் தான் இலையை வெட்ட தோதுவாக இருக்கும். ஆஸ் வைத்து அந்த வடிவத்தில் இலையை வெட்டி வெட்டி சேர்ப்பார்கள். பெரும்பாலும் பெரிய நரம்புகளை தவிர்த்துதான் இலை வெட்டுவார்கள். நரம்போடிருக்கும் இலையில் பீடி சுற்றுவது கடினம்.

அனுபவசாலிகள் ஆஸ் உபயோகிக்காமலே கண்ணாலே அளவெடுத்து இலையை வெட்டி விடுவார்கள். அனுபவமே சிறந்த ஆசான். கரும்புச்சாறு கடையில் கரும்பில் இருக்கும் கடைசி துளிச்சாறை கூட விடாமல் உறிஞ்சி சக்கையை போடுவது போல, முடிந்தவரை இலையை வெட்டி மீதியை சண்டாக போட்டு விடுவார்கள்.

வெட்டிய இலைகளையும் ஒரு ஈரத்துணி அல்லது சின்ன ஓலை பெட்டியில் வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பீடி சுற்றுவார்கள்.

பீடித்தட்டில் உள்ளே வெட்டப்பட்ட பேப்பரை போட்டு அதற்கு கீழே ரூபாய் இருக்கும். மேலே புகையிலை, நூல் , கத்தி , வாய் அமுக்கிற குச்சி போன்றவைகளோடு ரூபாய் நாணயங்களும் கிடக்கும். நினைக்கும் பொழுதெல்லாம் காசு கொடுக்கும் பீடித்தட்டு தான் எங்களின் அன்றையக்கால ATM. நாணயங்களில் ஒட்டியிருக்கும் புகையிலையும் அதன் வாசமும் இன்னும் மனதிலும் சிந்தையிலும் இருக்கிறது.

தொகுப்பு : Our Tirunelveli

காய்ந்த தங்கம் உதிரியாக கிடப்பது போலிருக்கும் புகையிலையை இலைக்குள் வைத்து உருட்டி , கீழ்முனையை நேக்காக மடித்து , இரண்டு சுருட்டு சுருட்டி நூல் கொண்டு கீழ்முனையை கட்டி வாய்முனையை குச்சி வைத்து அமுக்கி விட்டால் பீடி தயார்.

பெரும்பாலான பீடி கம்பெனிகளில் வெள்ளை அல்லது ரோஸ் கலர் நூல் தான். கம்பெனியில் கொடுக்கும் 1 குஞ்சம் நூலில் 20000 பீடி சுற்ற வேண்டும்.

குஞ்சமாகயிருக்கும் நூலினை இராட்டினத்தில் வைத்து ஆட்டி சிறிய நூற்கண்டுகளில் திரித்து வைத்து கொள்வார்கள். வீடுகளில் இருக்கும் அந்த இராட்டினங்களை சுற்றும் பொழுது மனதில் காந்திஜியாக உணர்ந்த காலமெல்லாம் பொற்காலம்.

பெரும்பாலும் வாய் அமுக்கிற வேலையை கடைசியில் மொத்தமாக தான் செய்வார்கள். புதியவர்களுக்கு பயிற்சி வாய் அமுக்குவதில் இருந்து தான் தொடங்கும். ஒரு பீடியின் அழகே அதன் மேல்முனையும் கீழ் முனையும் தான். பெரிய முனையை முதலில் உள்ளே மடித்து விட்டு பின்னர் இரண்டு பக்கங்களையும் மடித்து கடைசியாக மிஞ்சியிருக்கும் இலையை மடித்து விட்டால் வாய் அமுக்குற டெஸ்டில் நாம் பாசாகி விடலாம்.

மொத்தமாக பீடி சேர்ந்ததும் அதனை கம்பெனிகேற்ப கட்ட வேண்டும். காஜா பீடி, கணேசன் பீடி கம்பெனிக்கு ஒரு கட்டுக்கு 25 பீடி. மல்லிச்சேரி பீடி கம்பெனிக்கு ஒரு கட்டுக்கு 10 பீடி. காஜா பீடி கம்பெனியில் ஸ்பெஸல் பீடி என்ற ஒரு ரகம் உண்டு. பச்சை கலர் நூல் , ஒரு கட்டுக்கு 15 பீடி என தனித்துவமாக இருக்கும் பீடி அது.

ஒவ்வொரு கம்பெனிக்கும் பீடியின் அளவும் நூலும் மாறுபடும். கணேசன் கம்பெனி பீடி ஒல்லியாகயிருக்கும். மல்லிச்சேரி கம்பெனி பீடி தடியாகவும் நீளமாகவும் இருக்கும். பீடிகள் கட்டாக மாறி விட்டது. இப்போது கம்பெனியில் கொண்டு கொடுக்கணும்.

காலை மற்றும் மாலை இரண்டு நேரங்களில் ஏதாவது ஒரு வேளையில் பீடி கொடுப்பார்கள்.பீடிக்கொண்டு போக ஒரு ஓலைக்கூடை இருக்கும். அதில் பீடிக்கட்டுகள், கச்சாத்து, சொருவு பீடி ஆகியவற்றை போட்டுக்கொண்டு அரக்கப்பறக்க கம்பெனிக்கு ஓடுவார்கள்.

கம்பெனி இருக்கும் தெருக்கள் மாலை 5 மணியிலிருந்து பெண்கள் நடமாட்டதால் பரபரப்பாக இருக்கும்.பீடிக்கொடுக்க அத்தனை கூட்டமாக இருக்கும். பெட்டியை வரிசையில் வைத்து விட்டு கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமாகி விடுவார்கள். காத்திருக்கும் அந்த கொஞ்ச நேரத்தில் வாயை சேலை முனையால் மூடியபடியே குடும்ப பேச்சுக்கள் முதல் ஊர் செய்திகள் வரை பேசி முடித்து விடுவார்கள். பெண்களுக்கு மட்டுமே இருக்கும் விசேஷ திறமை இது.

பீடியை தரம்பார்த்து சோதிக்க கண்காணிப்பாளர்கள் இருப்பார்கள். அவர்களின் முன்னாலிருக்கும் ஓலைத்தட்டில் கொட்டப்படும் பீடிகளை தங்கத்தை சோதிப்பது போல சோதனை செய்து , சரியில்லாத பீடியை உருவி விடுவார்கள். உருவிய பீடிக்கு பதிலாக கொண்டு வந்திருக்கும் சொருவு பீடியை சொருகி கட்டினை பூர்த்தி செய்ய வேண்டும்.

சிலநேரங்களில் கண்காணிப்பாளர்கள் சிடுசிடுவென இருப்பார்கள். அந்த சமயங்களில் அவர்களிடம் சிக்கும் பீடிகள் அவ்ளோதான். அவங்க இஸ்டத்துக்கு பீடியை உருவி விடுவார்கள். கொண்டுச்சென்ற சொருவு பீடிகள் தீர்ந்து பக்கத்தில் கடன் வாங்கும் சூழல் கூட ஏற்படும்.

சோதனை முடிந்தபிறகு பீடியை எடுத்துக்கொள்வார்கள். அதுதான் பெண்கள் சிறிது நிம்மதி மூச்சுவிடும் நேரம். பீடியை கொடுத்ததும் கச்சாத்தை கொண்டுபோய் கணக்கு எழுதணும். அங்கேதான் பணமும் (கூலி) கொடுப்பார்கள்.

பணம் வாங்கிய பிறகு தூள் வாங்க போகணும். புகையிலை மற்றும் இலையை தான் தூள் என சொல்லுவார்கள். ஆயிரம் பீடிக்கு 500 கிராம் இலையும் , 200 கிராம் புகையிலையும் தருவார்கள். ரேஷன் கடையில் போடும் அரிசி மட்டுமில்ல , இங்கே போடும் இலையும் நன்றாகயிருந்தால் தான் உண்டு. இல்லையென்றால் வெளியே தான் வாங்கணும்.

கம்பெனியில் இருந்து வரும்பொழுது கருப்பட்டி , பண்டம் ஏதாவது வாங்கி வந்து குழந்தைகளுக்கு கொடுத்து அவர்கள் சிரிப்பில் தன் சிரிப்பை கண்டுக்கொண்ட தாய்மார்கள் போற்றப்படக்கூடியவர்களே.!

குனிந்து குனிந்து பீடி சுற்றி தங்கள் தலைமுறைகளை குனிய விடாமல் நிமிர செய்த எங்க ஊரு பெண்களிடம் படிக்க ஆயிரம் பாடங்கள் உண்டு.

Repost from Abu Farhana, மேலப்பாளையம்.

அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐒𝐨𝐜𝐢𝐚𝐥𝐌𝐞𝐝𝐢𝐚 & 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

பீடி தொழிலும், தென் மாவட்ட பெண்களும் :

தமிழகத்தின் பல தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவில் பீடித் தொழில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு முழுவதும் 75 பெரிய பீடி உற்பத்தி நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு 50,00,000 மேற்பட்ட பீடிகள் உற்பத்தி செய்கிறது. மேலும் 500 சிறு பீடி உற்பத்தி நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு 50,000 முதல் 5 இலட்சம் வரையிலான பீடிகள் உற்பத்தி செய்கின்றனர். நாளொன்றுக்கு 50 கோடி பீடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. 1,000 பீடியின் மதிப்பு 250 ரூபாய் ஆகும். தமிழ்நாட்டில் ஆண்டிற்கு 4,000 கோடி பீடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பீடித் தொழிலில் அமைப்பு சாரா 5 இலட்சம் பேர் வேலை செய்கின்றனர். பீடித்தொழிலாளர்களில் 90% பெண்கள் ஆவார்.

மூலப்பொருட்கள் :

பீடித்தொழிலுக்குரிய மூலப்பொருளான தெண்டு இலைகள் ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் மலைக்காடுகளிலிருந்து பெறப்படுகிறது. மேலும் புகையிலையை மகாராட்டிரா, குஜராத், போன்ற மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் தாராபுரம் பகுதிகளிலிருந்தும் பெறப்படுகிறது.

கூலி :

குறைந்தபட்ச ஊதியச் சட்டப்படி 1,000 பீடிகள் தயாரிக்கும் தொழிலாளியின் கூலி ரூபாய் 196/- ஆகும். ஆனால் சட்டப்படியான கூலியைவிட குறைந்த கூலியே பீடித்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 8 முதல் 12 மணி நேரம் வரை பீடிசுற்றும் முழுநேர தொழிலாளி 800 முதல் 1200 பீடிகளைச் சுற்றுவர். பகுதிநேரமாக பீடிச்சுற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நாளொன்றுக்கு 300 முதல் 500 பீடிகளைச் சுற்றுவர். பீடி சுற்றும் திறன் கண்டு பெண் கொடுத்தும், எடுத்தும் உள்ள குடும்பங்கள் பல நம் மாவட்டங்களில் உண்டு.

பீடி சுற்றும் தொழிலிடங்கள் :

தமிழ்நாட்டில் 95 ஆண்டுகளாக நடக்கும் பீடித்தொழில் தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் மேலப்பாளையம், வள்ளியூர், அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், தென்காசி, ஆலங்குளம், சுரண்டை பழமையான பீடி உற்பத்தி மையங்கள் ஆகும்.

சாதனைகள் :

சேமிப்புகள், வீடுகள், நகைகள், பல பட்டதாரிகள் என வீட்டிலிருந்தே பீடி சுற்றி இவர்கள் உருவாக்கிய பல அடையாளங்கள் இன்றும் நம்மோடே அழியா செல்வங்களாய் உள்ளது.

பாதகமும் இக்கால பெண்களின் தேவையும் :

பீடி தொழிலினால் பல படிப்புகளிலும், சுய தொழில்களிலும், மேற் குறிப்பிட்ட மாவட்ட பெண்கள் ஆர்வம் காட்டாததும் பாதகமே, மேலும் விவசாயம் உட்பட பல துறைகளில் இம்மாவட்ட பெண்களின் பங்களிப்பு பெரிதும் கடந்த நூற்றாண்டில் பாதிப்படைந்துள்ளது. தற்கால பெண்கள் இத்தொழிலில் இருந்து விடுபட்டு வந்தாலும், பீடி தொழிலினால் தங்களை பொருளாதார ரீதியில் பெண்கள் அவர்களை தற்காத்து கொண்டாலும் அனைத்து துறைகளிலும் பெண்கள் பங்கெடுத்து சாதிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

ஒரு வீட்டு திண்ணையில் கூடி, ஊர் கதை பேசி பல தியாகங்களால் நம் குடும்பங்களை காத்த அந்த குல விளக்குகள் எல்லா செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ்கவே..

Repost from பாண்டிய நாடார்.

அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐒𝐨𝐜𝐢𝐚𝐥𝐌𝐞𝐝𝐢𝐚 & 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

Address

Tirunelveli
627651

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fans Of Uvari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby travel agencies


Other Tourist Information Centers in Tirunelveli

Show All